மூதாட்டியை அடித்துக் கொன்று மாமிசத்தை சாப்பிட்ட இளைஞர்..!! இப்படி ஒரு நோயா..? மருத்துவர்கள் ஷாக் தகவல்..!!

ராஜஸ்தானில் மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்று, அவரது சதையை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (65). இவருக்கு பிரேன் கதாத் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி சாந்தி தேவி, தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஒரு இளைஞர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். அதோடு இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும்போதே மூதாட்டியை கல்லால் அடிக்க தொடங்கி உள்ளார். அவர் தோற்றமும் செயல்பாடுகளும் விசித்திரமாக இருந்துள்ளன. இளைஞரின் இந்த தாக்குதலில் மூதாட்டி சாந்தி தேவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த இளைஞர் மூதாட்டியின் உடலை கிழித்து, அந்த நரமாமிசத்தை உட்கொள்ள தொடங்கினார். பின்னர், மூதாட்டியின் உடல் பாகங்களை வெட்டி அதன் சதையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுள்ளார். இதனை அவ்வழியாக வந்த மூதாட்டியின் மகன் பிரேன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த கொடூர காட்சியை பார்த்தும் அங்கிருந்து பயந்து ஓடி, அப்பகுதி மக்களை அழைத்து வந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மக்களை பார்த்து அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். உடனே இது பற்றி மூதாட்டியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அந்த இளைஞர் மும்பையைச் சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவர் ஆக்ரோஷமாக நடத்து கொள்கிறார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவமனை ஊழியர்களிடமும் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹைட்ரோபோபியா (Hydrophobia) நோயால் பாதிக்கப்பட்டு பங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வெறிநாய் கடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தடுப்பூசி போடாமல் சில நாட்கள் அப்படியே இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரேபிஸ் வந்திருக்கலாம். மேலும், இவர் உரிய சிகிச்சை பெறாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

இந்தியன் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon May 29 , 2023
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Manager, Team Lead, Chartered Accountant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 18 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல […]
job Vacancy..!! இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

You May Like