அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் இதுவரையில் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்ற வருடம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்துடன் போது ஐந்து வயது வரையிலான குழந்தைகள் இனிய அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அவருடைய அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் தமிழக அரசு தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரையில் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளிடமிருந்து பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.