“பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு-கண்ணியத்தில் சமரசம் இல்லை”!. வழக்கறிஞர் ரத்தோரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Supreme Court 2025 1

பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மே 26ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எந்தவொரு நீதித்துறை அதிகாரியின் மீதும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, ​​சட்டம் அதைச் சரிசெய்து மீட்டெடுக்கும் நூலாகச் செயல்பட வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான துஷ்பிரயோகம் மூலம் ஒரு நீதிபதியை அச்சுறுத்தும் அல்லது மிரட்டும் எந்தவொரு செயலும் நீதியின் மீதான தாக்குதல் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும், உயர் நீதிமன்றம் அந்த கால அவகாசத்தை 18 மாதங்களாகக் குறைத்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் நீதித்துறை அதிகாரியின் கண்ணியத்தை அவமதித்ததற்காக வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே, குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ரத்தோர் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மேலும், சிறைவாசம் கடுமையாக இருக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். ஆனாலும் 18 மாத சிறை தண்டனையை குறைக்க மறுத்துவிட்டது. மேலும், பெண் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்,”பெண் நீதிபதிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதில் எந்த மெத்தனமும் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக உணர வேண்டும்,” எனவே, பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று நீதிபதிகள் அமர்வு வலியுறுத்தியது.

குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய பெண் நீதிபதியின் சத்தியப்பிரமாண சாட்சியத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, “நீங்கள் எந்த வகையான மொழியைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று பாருங்கள். உங்கள் மனுவை நாங்கள் ஏற்றுக்கொண்டால் நீதிபதிகள் எவ்வாறு செயல்படுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி்கள், ரத்தோருக்கு சரணடைய இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்தது.

Readmore: சோகம்!. பிரபல காமெடி நடிகர் டெலிபோன் சுப்ரமணி காலமானார்!. திரை பிரபலங்கள் இரங்கல்!

KOKILA

Next Post

இனி ஏசியை பயன்படுத்த இதுதான் லிமிட்!. புதிய கட்டுப்பாடு!. மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதிரடி!

Wed Jun 11 , 2025
ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]
Manohar Lal Khattar AC 11zon

You May Like