COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை..!! – Serum Institute விளக்கம்

covid 19 vaccine 11zon

கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட் பாதுகாப்பானது என்றும், அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் Serum Institute of India தெரிவித்துள்ளது.


கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவை நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோளாக காட்டிய Serum Institute, தனது X பதிவில், “COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பதே பெரிய அளவிலான ஆய்வுகளின் முடிவாக உள்ளது. தடுப்பூசிகள் பாதுகாப்பானதும், அறிவியல் பூர்வமாக சோதிக்கப் பட்டதும் ஆகும்,” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், “மாரடைப்பு மரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் இடையே நேரடி தொடர்பு இல்லை” என உறுதி செய்துள்ளது. திடீர் மரணங்களுக்கு காரணமாக இருப்பவை என்ன என்பதை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  • மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
  • வாழ்க்கை முறை (உடற்பயிற்சி குறைவு, புகைபிடிப்பு, மது பழக்கம்)
  • முன்னே இருந்த நோய்கள் (உயர் அழுத்தம், இரத்த சர்க்கரை)
  • கோவிட் பிந்தைய உள் உறுப்பு பாதிப்பு ஆகியவை, இளைஞர்களில் மாரடைப்புகளுக்கு முக்கிய காரணிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR மற்றும் AIIMS ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின்படி, கோவிட்-19 தடுப்பூசிகள் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகித்துள்ளன. அதே நேரத்தில், அதனால் ஏற்படும் தீவிர பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன.

Read more: அஜித்குமார் மரணம்: “விவரம் அறிந்தவர்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்கலாம்..!” – வழக்கறிஞர்

Next Post

தேர்தல் கூட்டணி.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

Fri Jul 4 , 2025
இன்று நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் மாநில செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தலையொட்டி […]
20250214090756 Vijay

You May Like