“கடுமையான அச்சுறுத்தல் இல்லை..” கோவிட் பரவலுக்கு மத்தியில் இந்தியாவின் டாப் விஞ்ஞானி சொன்ன குட்நியூஸ்..

nb 1 8 1 lf 7 variants of covid detected in india check if its deadly symptoms preventive measures other details covid news 1

இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பல பகுதிகளில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.. இருப்பினும், இந்த இந்த மாறுபாடுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்காது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. வயதான நோயாளிகள் அல்லது கடுமையான இணை நோய்க் கொண்டவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்த நிலையில் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் வினீதா பால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது “ வைரஸின் புதிய பிறழ்வுகள் உருவாகி பரவி வருகின்றன, ஆனால் அவை முந்தைய அலைகளின் போது காணப்பட்ட டெல்டா மாறுபாடு போன்று ஆபத்தானதாக இல்லை.. தற்போதைய கோவிட்-19 அலை, 2021 இல் டெல்டா அலையின் போது இந்தியா அனுபவித்ததை விட மிகவும் வித்தியாசமானது.

அப்போது, ​​இந்த வைரஸ் நமது நோயெதிர்ப்பு அமைப்புகளுக்குப் புதியதாக இருந்தது, மேலும் மக்கள் இதற்கு முன்பு அதற்கு ஆளாகியிருக்கவில்லை. இது பரவலான கடுமையான நோய்க்கும் ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடிக்கும் வழிவகுத்தது.. ஆனால் இன்று, நிலைமை வெகுவாக மாறிவிட்டது. பரவலான தடுப்பூசி மற்றும் இயற்கை தொற்றுகள் பெரும்பாலான மக்களிடையே சமூக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவியுள்ளன.

பெரும்பாலான மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு டோஸ் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு தடுப்பூசி அளவையாவது பெற்றுள்ளனர். இப்போது உடல் வைரஸுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர் “ கோவிட்-19 பருவகால காய்ச்சலைப் போன்ற ஒரு கட்டத்தில் நுழைந்துள்ளது, அவ்வப்போது புதிய வகைகள் தோன்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு மட்டுமே மோசமான பாதிப்பு ஏற்படும்.. புதிய மாறுபாடுகள் வெளிப்படும்போது அவற்றை நாங்கள் தொடர்ந்து நிர்வகித்து வருகிறோம். இதன் பொருள் வைரஸ் போய்விட்டது அல்லது பாதிப்பில்லாதது என்று அர்த்தமல்ல, ஆனால் அச்சுறுத்தலின் அளவு மிகவும் குறைவாக உள்ளது,” என்று அவர் விளக்கமளித்தார்.

புதிய மாறுபாடுகள் அதிகமாக பரவும் தன்மை கொண்டவை என்றாலும், அவை தற்போது பெரிய அளவிலான கடுமையான நோயை ஏற்படுத்துவதில்லை என்றும் டாக்டர் வினீதா பால் சுட்டிக்காட்டினார். மேலும் “ஒரு புதிய மாறுபாடு இன்னும் வீரியமாக இருக்கலாம், ஆனால் நமது மக்கள்தொகையில் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், தாக்கம் மிகவும் குறைவாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

நாள்பட்ட இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் முந்தைய அலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அதிக ஆபத்துள்ள நபர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட் தொடர்ந்து ஒரு உள்ளூர் நிலையை நோக்கி நகர்வதால், மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளையும் எதிர்வினையையும் சரிசெய்யுமாறு டாக்டர் பால் அறிவுறுத்தினார்.. “2020 முதல் 2022 வரை, தடுப்பூசி அல்லது தொற்று மூலம் உங்கள் சமூகம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருந்தால், இப்போது எந்த புதிய மாறுபாடும் பெரிய நோய் அல்லது அதிக இறப்பு விகிதங்களை ஏற்படுத்தும் என்பது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் எய்ம்ஸ் தலைவரும் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் கலேரியா, கோவிட் இப்போது பரவும் தன்மை கொண்டதாக உள்ளது, அதாவது வைரஸ் இங்கேயே இருக்கும், மேலும் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) வைரஸைப் போலவே மாறிக்கொண்டே இருக்கும் என்று கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல், கடந்த வாரம், தொற்றுநோய்களின் தீவிரம் லேசானது என்றும் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார். “மக்கள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. மக்கள் சாதாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வையுங்கள்!. நாடு முழுவதும் சுகாதாரத் துறை எச்சரிக்கை!

English Summary

இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.

RUPA

Next Post

செம குட் நியூஸ்..!! இனி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா..!! காலதாமதம் செய்தால் உடனே ஆக்‌ஷன்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

Fri Jun 6 , 2025
இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் […]
Registration Department

You May Like