“வலியே இருக்காது.. ஆனால் பார்வை போகும்”..!! ஸ்டீராய்டு மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுகள்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Steroid 2026

இந்தியாவில் மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி, சுய மருத்துவமாக எடுத்துக்கொள்ளப்படும் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகள், ‘செகண்டரி கிளாக்கோமா’ (Secondary Glaucoma) எனப்படும் இரண்டாம் நிலை கண் அழுத்த நோய்க்கு முதன்மைக் காரணியாக அமைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி மாதம் ‘கிளாக்கோமா விழிப்புணர்வு மாதமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டீராய்டு மருந்துகளால் ஏற்படும் இந்தப் பார்வை இழப்பு ஆபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொதுவாகத் தோல் நோய்கள், ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றைச் சொட்டு மருந்தாகவோ, மாத்திரைகளாகவோ அல்லது இன்ஹேலர்களாகவோ நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தும்போது, அவை கண்ணின் உட்புற அழுத்தத்தை (Intraocular Pressure) அதிகரிக்கின்றன. இந்த அழுத்தமானது மெல்ல மெல்லப் பார்வை நரம்புகளைச் சிதைத்து, இறுதியில் மீட்க முடியாத நிரந்தரப் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 1.3 கோடி மக்கள் இத்தகைய கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவென்றால், ஆரம்பக் கட்டத்தில் எவ்வித வலியோ அல்லது பார்வைக் குறைபாடோ தெரிவதில்லை. மையப்பார்வை (Central Vision) நன்றாகவே இருப்பதால், தங்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்ற தவறான நம்பிக்கையில் நோயாளிகள் இருந்துவிடுகின்றனர். ஆனால், அறிகுறிகள் வெளியே தெரிய வரும்போது பாதிப்பு 80 சதவீதத்தைத் தாண்டி முற்றிய நிலையை எட்டிவிடுகிறது.

குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் கிட்டப்பார்வை (Myopia) உள்ளவர்களுக்கு இந்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். எனவே, மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்துக்கடைகளில் நேரடியாக ஸ்டீராய்டு மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நீண்ட நாட்களாக இத்தகைய மருந்துகளை உட்கொள்பவர்கள், உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். தொடக்கத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே நவீன சிகிச்சைகள் மூலம் எஞ்சியுள்ள பார்வையைப் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Read More : அப்படிப்போடு..!! விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு..!! ரூ.8,000ஆக உயரும் தொகை..!!

CHELLA

Next Post

Flash : பெரும் ஷாக்..! ஒரே நாளில் ரூ.2,960 உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி விலை ரூ.13,000 உயர்வு..!

Wed Jan 28 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
jewels new

You May Like