5 நாட்களுக்கு மழை இருக்கும்… அடுத்து 24 மணிநேரத்துக்கு “இடிமின்னலுடன் மழை” -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

வட தமிழ்நாடு நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 26-27, குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

கிம் ஜாங் உன் தனது மகளுடன் உள்ள போட்டோ வைரல்…!!

Tue Nov 22 , 2022
ஆணாதிக்க நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் முதல் முறையாக தனது மகளுடன் கையை கோர்த்து நடந்தபடி போட்டோ வெளியாகியுள்ளது. வடகொரியா கட்டுப்பாடுகள் அதிகமாக கொண்ட ஒரு நாடு. இந்நாட்டை ஆட்சி செய்து வருபவர் கிம் ஜாங் உன். இவர் அடக்குமுறை ஆட்சி செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இது நாள் வரையில் தன் மனைவியைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ குடும்பத்தை பற்றியோ எந்த தகவலையும் வெளியிட்டதில்லை. இந்நிலையில் […]
’அமெரிக்காவுடனான ராணுவ மோதலுக்கு வடகொரியா எப்போதும் தயார்’..! - அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்

You May Like