’த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு இவர்கள் தான் காரணம்’..!! வெளிப்படையாக சொன்ன அவரது தாய்..!!

தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல நாயகிகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது அவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார். மேலும், லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.


இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் அம்மா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ”வருணுடன் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் முடிந்தது குறித்து நிறைய விஷயங்கள் எழுதுகிறார்கள். ஆனால் உண்மை என்பது எங்களுக்கு தான் தெரியும். த்ரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள். பின் எல்லாம் தெரிந்து தானே நிச்சயம் செய்தார்கள். கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என்று சொன்னார்கள், வருண் என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். அதுதான் உண்மை.

த்ரிஷா கல்யாணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பல பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி இன்னும் நிறைய பேர் இன்வால்வாகி இருக்கிறார்கள். ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது தான் நல்லது” என பேசியுள்ளார்.

CHELLA

Next Post

’குஷ்பூ மட்டும் வரவில்லை என்றால் அவருக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன்’..!! சுந்தர்.சி ஓபன் டாக்..!!

Wed Apr 19 , 2023
இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றி படங்கள் கொடுத்தவர் சுந்தர்.சி. அவர் நடிகை குஷ்பூவை காதலித்து கடந்த 2000இல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போதும் சுந்தர்.சி பிசியாக படங்கள் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் குஷ்பூ தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் சி, தனது வாழ்க்கையில் குஷ்பூ மட்டும் வரவில்லை என்றால் நிச்சயம் நடிகை சௌந்தர்யாவுக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் என […]
Kushboo

You May Like