fbpx

இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன், மெயில் கார்டு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதாகவும், இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 60,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் செய்திகள் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய ஊழியர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும். மொத்தமுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களின் வாயிலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், குறிப்பாக Postman, Mail Guard, Multi Tasking Staff உள்ளிட்ட குரூப் ‘சி’ பணியிடங்களுக்கும், கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய அஞ்சல் துறை கடந்த நவம்பர் 15ஆம் தேதி போஸ்ட்மேன் மற்றும் மெயில்கார்டு பதவிகளுக்கான வரைவு ஆட்சேர்ப்பு விதிமுறைகளை (draft Recruitment Rules) வெளியிட்டது. இதில், பெயர், பணியிடம், பணியின் வகைப்பாடு, ஊதிய விகிதம், பணி நிபந்தனை காலம், கல்வித் தகுதி முதலான நிலைகளில் பின்பற்ற வேண்டிய பொறுப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

மேலும், வரைவு ஆட்சேர்ப்பு விதிமுறைகள் குறித்து 30 (அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்குள்) நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அனைத்து அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, PostMan, Mail Gaurd பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

Thu Dec 1 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 260 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க […]

You May Like