fbpx

’ஆதார் கார்டில் அடிக்கப்படும் கொள்ளைகள்’..!! ’மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க’..!! ’தவறியும் இதை செய்யாதீங்க’..!!

நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக அவசியமானது. தற்போது பெரும்பாலான வேலைகளுக்கும், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில், ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அப்படிப்பட்ட ஆதார் கார்டை நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் அப்டேட்டாகவும் வைத்திருக்க வேண்டும்.

’ஆதார் கார்டில் அடிக்கப்படும் கொள்ளைகள்’..!! ’மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க’..!! ’தவறியும் இதை செய்யாதீங்க’..!!

பல நேரங்களில் ஆதாரில் விவரங்களை உள்ளிடும்போது சில தவறுகள் நடக்கின்றன. இந்த தவறுகளால் பிற்காலத்தில் சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆதார் கார்டில் உள்ள தவறுகளை எவ்வாறு சரிசெய்வது என்று நீங்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. ஆதார் கார்டை வழங்கும் UIDAI அமைப்பு, ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பெரும்பாலான தவறுகள் பெயர் மற்றும் முகவரியில் மட்டுமே வருகின்றன. ஆதார் கார்டில் ஏற்படும் தகவல்களால், பல நேரங்களில் மக்கள் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கிவிடுகின்றனர். ஆதார் கார்டில் உள்ள தவறுகளைத் திருத்த அதிக கட்டணம் செலுத்தவும் செய்கின்றனர்.

’ஆதார் கார்டில் அடிக்கப்படும் கொள்ளைகள்’..!! ’மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க’..!! ’தவறியும் இதை செய்யாதீங்க’..!!

இதுபோன்ற சூழ்நிலையில், ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களில் உள்ள தவறுகளைத் திருத்த ரூ.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவர் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் ஆதார் அப்டேட் செய்யச் செல்லும் மையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் https://resident.uidai.gov.in/file-complaint என்ற வெப்சைட்டில் சென்று புகார் அளிக்கலாம்.

’ஆதார் கார்டில் அடிக்கப்படும் கொள்ளைகள்’..!! ’மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க’..!! ’தவறியும் இதை செய்யாதீங்க’..!!

நீங்கள் ஓரளவுக்கு ஸ்மார்ட்போனைக் கையாளத் தெரிந்தவராக இருந்தால் வீட்டிலிருந்தபடியே ஆதார் எண்ணை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குத்தான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லை. அரசு சேவை மையங்கள் மட்டுமல்லாமல் தனியார் இ-சேவை மையங்களிலும் ஆதார் அப்டேட் செய்யலாம். ஆனால் அங்கும் சில அப்டேட்களை நீங்கள் செய்ய முடியாது. ஆதார் கார்டில் உள்ள அப்டேட்களை திருத்தம் செய்ய ஆதார் சேவை மையத்துக்குச் செல்வதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம். அங்கே வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அப்டேட் செய்துகொள்ளலாம். ஆனால், மொபைல் நம்பர், பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு நீங்களே திருத்தம் செய்ய முடியாது. அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

Chella

Next Post

குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

Mon Dec 5 , 2022
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாடு தேசிய ஆசிரியர்‌ நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும்‌ ஆசிரியர்களின்‌ பிள்ளைகளுக்கு 2022 – 2023ஆம்‌ கல்வி ஆண்டிற்கு படிப்புதவித்‌ தொகை வழங்க விண்ணப்பங்கள்‌ பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. […]

You May Like