fbpx

அம்மாடியோவ்..!! Call Setting-இல் இவ்வளவு விஷயம் இருக்கா..? இனி கவலையே வேண்டாம்..!!

இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting-இல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில், இன்று இந்த பதிவின் மூலம் Incoming Call Setting -ல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அம்மாடியோவ்..!! Call Setting-இல் இவ்வளவு விஷயம் இருக்கா..? இனி கவலையே வேண்டாம்..!!

Tricks 1

* முதலில் உங்களுடைய Call செய்யும் ஆப்ஷன் உள்ளே செல்லுங்கள். அதை மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும்.

* அதை கிளிக் செய்யுங்கள். அதில், Settings என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Call All Display While Using Apps என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் 3 ஆப்ஷன் இருக்கும்.

* அந்த ஆப்ஷன் எதற்கு என்றால், நமக்கு வரும் Call திரையில் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தோன்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.  

* அதில் உங்களுக்கு பிடித்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்து கொள்ளலாம்.

Tricks 2

* அதேபோல உங்களுடைய Call செய்யும் ஆப்ஷனுக்கு சென்று அதன் மேல் இருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அதில் Caller Id And Spam Protection என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

* அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

* பின் அதன் கீழே Block Spam And Scam Calls என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அடிக்கடி வரும் Spam calls ஏதும் உங்களுக்கு வராது.

Tricks 3

* உங்களுடைய Call Settings உள்ளே சென்று, அதில் Call Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

* அதில் Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

* இப்பொழுது யாரவது உங்களுக்கு Call செய்யும் போது இந்த படம் திரையின் பின்னால் தோன்றும்.

Chella

Next Post

சிறுத்தையின் வேட்டைக்கு பலியான கல்லூரி மாணவி..! 

Sat Dec 3 , 2022
மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.  வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து […]

You May Like