fbpx

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியின் பெயர்: Agniveer விமானப்படை வீரர்கள்

வயது வரம்பு: அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். 4 ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

* கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

* அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

* தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்து முறை தேர்வு நடத்தப்படும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Document Verification, eligibility test, physical fitness test, medical examination போன்றவை நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனின் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்: 07.11.2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.11.2022

ஆன்லைன் தேர்வு நாள்: 18.01.2023 முதல் 24.02.2023 வரை

குறிப்பு

அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் தான் இந்திய விமானப்படையில் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குரூப் 1 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இலவச மாதிரி தேர்வு..!! நீங்களும் பங்கேற்கலாம்..!

Tue Nov 8 , 2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- I பணிகளுக்கான தேர்வு வரும் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை அடுத்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு வரும் […]

You May Like