குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையிலேயே நல்லதா..? அல்லது தீமையா..? என ஆய்வாளர்கள் கூறும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்.
சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறதாம். இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே இருப்பதால், உடலில் படும்படி சிறுநீர் கழித்தால், தொற்றும் ஏற்படாதாம். அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுகிறது.
ஆகையால், இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது என்றும் சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிக்கும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. ஏனென்றால், அதைக் கழுவ கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த முறையை தான் பயன்படுத்துவார்களாம்.
எனவே, குளிக்கும்போது சிறுநீர் மட்டுமின்றி, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் குளித்த பிறகு மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.