நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஸ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த இரு திட்டத்தின் கீழ் செயல்படும் காப்பகங்கள் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து போன்றவற்றை வழங்கப்பட்டு வருகிறது. இதழில் இணைந்துள்ள மற்றொரு திட்டமான ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீஅத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் ஊனமுற்றோர் போன்றோர் இருந்தால் அவர்களுக்கு தேவையான உடல் சம்பந்தமாக கருவிகள் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் பெருமளவு பயனடைந்து வரும் நிலையில், இவர்களுக்கு பென்ஷன் திட்டம் மூலம் வயதின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 60 முதல் 70 வயது உடையவர்களுக்கு ரூ.200 என்ற வீதம் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல 75 வயதிற்கும் மேற்பட்டு 80 வயது உடையவர்களுக்கு ரூ.500 என்ற அடிப்படையில் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரம் மற்றும் இதர நேரங்களில் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் உடல் சம்பந்தமான பிரச்சனைகளை தெரிவிக்க இலவச தொடர்பு எண்ணையும் வழங்கி உள்ளனர். அந்த வகையில், மூத்த குடிமக்கள் 14567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் தேவைகளை தெரிவிக்கலாம்.