கல்விக்கடனுக்கான உத்தரவாத வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டு வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளில் கல்விக்கடனுக்கான உத்தரவாத வரம்பு தற்போது ரூ.7.5 லட்சமாக உள்ளது. இதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க திட்டமிட்டு வருவதாக பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி இந்நடவடிக்கையை பொதுத்தறை வங்கிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேல்படிப்பை தொடரமுடியாத மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசுகள் வங்கிகளின் மூலம் சிறந்த மாணவர்களுக்கு வழங்குகின்றது. கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதற்காக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கல்விக் கடனைப் பெற மாணவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது படிப்பிற்கான அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும்.கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இந்த உத்தரவாதம் இதுவரை ரூ.7.5லட்சம் மதிப்பாக இருந்து வந்த நிலையில் தற்போது, கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.