கோடை காலத்தில் மக்கள் தங்களது உடலை குளிர்விப்பதற்காக எலுமிச்சை சோடா உள்ளிட்ட குளிர்பானங்களை குடிக்க அதிகம் விரும்புகின்றனர். எப்படியிருந்தாலும், கோடையில் குளிர்ச்சியாக சோடா மற்றும் எலுமிச்சை சோடா போன்ற பானங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. சோடாக்கள் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை தருகிறது என்றாலும், அதில் பல தீமைகளையும் இருக்கின்றன. இது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போது பார்க்கலாம்.
எலும்பு : எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சோடாவில் இல்லை. தொடர்ந்து சோடா குடிப்பதால், எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை : சோடாவில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன. தொடர்ந்து சோடா குடிப்பது தொற்று அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.
இதய பிரச்சனை : சோடாவில் சோடியம் மற்றும் காஃபின் அதிகமாக உள்ளதால், இது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொடர்ந்து சோடா குடிப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம் : சோடாவில் உள்ள அதிக அளவு சோடியம் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் : சோடாவில் உள்ள அதிக அளவு சர்க்கரையால், உடல் எடை அதிகரிக்கிறது. சோடா குடிப்பது உடல் எடையை அதிகரிக்கவும், உடல் பருமனை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
டைப்-2 நீரிழிவு : சோடாவில் அதிக அளவு சர்க்கரை இருப்பது டைப்-2 நீரிழிவு நோயை அதிகரிக்கும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது டைப்-2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மை : சோடாவில் உள்ள அதிக அளவு காஃபின் கவலை, அமைதியின்மை மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.