இந்திய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்தினால் போதும். இந்த கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கல்வித் தகுதி 21.8.2023 தேதியின்படி, ஏதாவது ஒரு துறையில், இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.41,960 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகும். மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.