மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழக நீலகிரியில் உள்ள கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டன் அலுவலகத்தில் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளின் முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
![#Job Alert..!! தமிழகத்தில் மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/09/7-million-jobs-can-disappear-by-2050-study-1579691557.jpg)
பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | கல்வித்தகுதி |
தூய்மை பணியாளர் (Safaiwala) | 4 | ரூ.15,700-50,000 | 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
எதிர்பார்க்கும் தகுதிகள்:
தூய்மை பணி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ளதால் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் வயது 21 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் திறமை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்:
தூய்மை பணியாளர் திறமை தேர்வுக்காக ரூ.150/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST/Widow/DAP/Transgender பிரிவினருக்குத் தேர்வு கட்டணம் கிடையாது. கட்டணத்தை IMPS/NEFT/RTGS போன்றவற்றை உபயோகப்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்த வேண்டிய கணக்கு விவரம் :
Name: The Chief Executive Officer, Account No: 38748594809, IFSC Code: SBIN0000828, Bank: State Bank of India, Branch: Coonoor
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் Cantonment Board Wellington அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://wellington.cantt.gov.in/recruitment/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 02.12.2022 மாலை 5 மணி வரை