fbpx

”இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க”..!! ”காது கேட்காம கூட போகலாம்”..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய பலரும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். சிலரோ தினமும் ஒரு முறையாவது இந்த பட்ஸை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இது தூசி, நுண்ணுயிரிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. உங்கள் காதுகளின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுவே, காதுகளின் உள் பகுதியை சுத்தம் செய்ய அதனைப் பயன்படுத்தும்போது, ​​அது காதுகளுக்குள் உருவாகும் மெழுகு ஆழமாக தள்ளுகிறது. இதனால் காதில் அடைப்பு ஏற்படும். இதனால், காது வலி, காது கேளாமை போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் காதுகளை சுத்தம் செய்வதற்கு பல வழிமுறை உள்ளன. நீங்கள் குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு நுழைந்து தேங்கிய காது மெழுகுகளை தளர்த்தும் போது காதுகள் சுத்தம் செய்யப்படும். தளர்ந்த மெழுகு தானே வெளியே வரும். மெல்லுதல், கொட்டாவி விடுதல் மற்றும் பேசுதல் போன்ற உங்கள் தாடை அசைவுகளாலும் மெழுகு வெளியே தள்ளப்படுகிறது. இயர்பட்களை பயன்படுத்துவதால், மெழுகு இறுக்கமாக மாறி அடைப்பு ஏற்படலாம். இதனால் தலைச்சுற்றல், அரிப்பு, காது கேளாமை மற்றும் காதுகளில் வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

உங்களது காதில் இயர்பட்களை பயன்படுத்துவதால் அது பாக்டீரியாவை உள்ளே செல்ல வழி செய்கிறது. இதனால் உங்களுக்கு வலிமிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும். காது அடைப்பு, காது கேளாமை, காது வலி அல்லது காது பகுதியில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Chella

Next Post

திமுகவில் பரபரப்பு...! அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்...!

Fri Sep 8 , 2023
ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையான அமைச்சர் ஐ பெரியசாமியின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் […]

You May Like