பிரதமரின் நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் அவகாசம் இருக்கிறது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 13-வது தவணைப் பணம் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து நிதி உதவி பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்து பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.