fbpx

வாட்டி வதைக்கும் வெயில்..!! உடல் சூடு உடனே குறைய சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..!!

வெயில் காலம் வேகம் எடுக்க தொடங்கியதை அடுத்து பலரையும் உடல் சூடு பிரச்சனை வாட்டி வதைத்து வருகிறது. அதிகரிக்கும் உடல் வெப்பநிலையால் உடல் சோர்வு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை, சிறுநீர் பாதையில் எரிச்சல் மற்றும் சருமத்தில் கொப்புளங்கள் ஆகிய பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உடல் வெப்பத்தை சமநிலைக்கு கொண்டு வரும் உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

அதிக நீர் சத்து மிக்க தர்ப்பூசணி பழம், உடல் சூட்டை தணித்து சரும வறட்சியை போக்கும். நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ள வெள்ளரிக்காய். உடல் வெப்பத்தை குறைப்பதோடு செரிமான கோளாறுகளுக்கும் தீர்வாக அமையும். உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது முலாம்பழம். ஆனால் முலாம் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் வர வாய்ப்புள்ளது என்பதால் அவற்றை அளவாக சாப்பிட வேண்டும். இயற்கை தரும் சுவையான இளநீரை குடிப்பதால் உடல் சூடு கட்டுக்குள் இருப்பதோடு ரத்த சர்க்கரை அளவுகளையும் சீராக உதவுகிறது.

நீர் சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள நுங்கை அவ்வப்போது சாப்பிட்டு வர உடலின் வெப்பநிலை சிறப்பாக பராமரிக்கப்படும். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பத நீர் உடல் சூட்டை மட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தையும் அளிக்கிறது. மேலும், நார்ச்சத்து நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள வெந்தயத்தை அன்றாட சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெயில் காலத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நீர்ச்சத்து நிறைந்துள்ள நீராகாரத்தை காலை உணவாக எடுத்துக் கொள்வது சரியான தேர்வாக அமையும். வெயில் காலத்தில் அவ்வப்போது கம்மங்கூழ் சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்ணம் குறைவதோடு உடல் சோர்வு நீங்கி மேம்பட்ட ஆரோக்கியத்தை பெற முடியும் என்பதே உணவில் நிபுணர்களின் கருத்தாக உள்ளது

Chella

Next Post

வீரம் பட நடிகரின் வாழ்வா... சாவா போராட்டம்..!! கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி பதிவு..!!

Tue Apr 4 , 2023
வீரம் நடிகர் பாலா மருத்துவமனையில் தனது 2-வது திருமண ஆண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், இதில் மரணத்திற்கு வாய்ப்பு உள்ளது.. உயிர்பிழைக்கவும் வாய்ப்பிருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். நடிகர் பாலா தமிழில் வீரம், மஞ்சள் வெயில், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள முதல் மனைவியின் விவாகரத்திற்கு பிறகு […]
வீரம் பட நடிகரின் வாழ்வா... சாவா போராட்டம்..!! கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி பதிவு..!!

You May Like