fbpx

அமேசான், பிளிப்கார்டில் செம ஆஃபர்..!! மிகக்குறைந்த விலையில் இப்படியும் பொருட்களை வாங்கலாமா..?

பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட்டில் ஆஃபர் விற்பனை தொடங்கியுள்ளது.

இணைய வர்த்தக உலகில் அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் முன்னணியில் உள்ளன. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளின் விலையானது அனைத்து நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. பண்டிகை காலங்களில் பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பொருட்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில், தற்போது அமேசான், பிளிப்கார்ட்டில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ஆஃபர் விற்பனை நாட்களில் நாம் வாங்கும் பொருளின் விலையானது தங்கம், வெள்ளி விலை போல மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு டி-ஷர்ட் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அந்த டி-ஷர்ட்டின் விலை நேற்று ரூ.300 ஆகவும், இன்று ரூ.350 ஆகவும் இருக்கலாம்.

அமேசான், பிளிப்கார்டில் செம ஆஃபர்..!! மிகக்குறைந்த விலையில் இப்படியும் பொருட்களை வாங்கலாமா..?

அடுத்த சில நாட்களில் அந்த டி-ஷர்ட்டில் எந்த அளவு வேறுபட்டு இருக்கும் என்றும் தெரியாது. இந்த விலை மாற்றங்கள் சலுகைகள் அனைத்தும் அமேசான் விற்பனையாளர், வங்கி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணமாக நிகழ்கிறது. எனவே, நாம் வாங்க நினைக்கும் பொருளானது, அதன் விலை குறைக்கப்பட்ட நாளில் தான் வாங்குகிறோமா என்பது முக்கியமானது. இதற்காக குறிப்பிட்ட அந்த பொருளின் முந்தைய விலை குறைப்பு நாட்களையும், இனி குறையப் போகும் நாளையும் பார்க்க வேண்டும். இதற்காக பல செயலிகள் உள்ளன. https://www.pricebefore.com அல்லது https://pricehistoryapp.com என்ற தளத்தில் பார்க்கலாம்.

Amazon அல்லது Flipkart-இல் நாம் வாங்க நினைக்கும் பொருளைத் தேடி, அந்த தயாரிப்பின் லிங்க் காப்பி செய்து, மேற்குறிப்பிட்ட தளத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் தேடிய பொருளின் அதிகபட்ச விலை எவ்வளவு, குறைந்தபட்ச விலை எவ்வளவு, எந்தெந்த காலக்கட்டங்களில் விலை குறைந்துள்ளது உள்ளிட்ட விவரங்களைக் காணலாம். மேலும், இதற்கு பிறகு விலை குறைந்தால், அது குறித்து நோட்டிபிகேஷன் வர வைக்கும்படியும் அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பிய பொருளை, குறைந்த விலையில், நிறைவான முறையில் வாங்கிக் கொள்ளலாம்.

Chella

Next Post

#Job: TVS நிறுவனத்தில் வேலை…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Mon Jan 16 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Territory Service Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]

You May Like