fbpx

’ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் வசதி’..!! ’இனி இந்த எண்ணுக்கு ஃபோன் செய்தால் மட்டும் போதும்’..!!

ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனாலும், ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை. நாட்டில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

’ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் வசதி’..!! ’இனி இந்த எண்ணுக்கு ஃபோன் செய்தால் மட்டும் போதும்’..!!

அதுமட்டுமின்றி ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை 1800-2200-14 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம் வாய்ஸ் மெயில் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 020-71177775 என்ற எண்ணுக்கு ஓய்வூதியத்தாளர்கள் தங்களின் குறைகளை வாய்ஸ் மெயிலாக அனுப்ப முடியும். இந்த சேவையை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’அதெப்படி திமிங்கலம் 4 மாசத்துல’..? குழப்பங்களும் கேள்விகளும்..!! விளக்கம் தருமா விக்கி-நயன் ஜோடி?

Mon Oct 10 , 2022
விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில், இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பி வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளில் ஹனிமூன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
விக்கி-நயன் குழந்தை விவகாரம்..!! விதிகளை மீறிய மருத்துவமனை..!! வெளியாகிறது அறிக்கை..!! பாய்கிறது நடவடிக்கை..!!

You May Like