கோவை மாவட்டம் நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
- மருத்துவ அலுவலர் – (49)
2. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – (49)
3. சுகாதார பணியாளர் – (49)
வயது வரம்பு:
- மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் – 45 வயது வரை
2. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 35 வயது வரை
சம்பள விவரம்:
- மருத்துவ அலுவலர் – ரூ.60,000
2. சுகாதார பணியாளர் – ரூ.14,000
3. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – ரூ.8,500
கல்வித் தகுதி:
- மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பச்தாரர்கள், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 2 வருட சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பப் படிவத்தை, கோவை மாவட்ட https://coimbatore.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2023 மாலை 5.00 மணி
விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351