தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர் & கணினி மேலாளர்/தரவு மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம்:
பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர் – 2 (காலியிடம்)
கணினி மேலாளர்/தரவு மேலாளர் – 1 (காலியிடம்)
கல்வித்தகுதி:
பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர் பணிக்குச் செவிலியர் படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி மேலாளர்/தரவு மேலாளர் பணியிடங்களுக்கு System Manager/ Data Manager -Master in Disability Rehabilitation Administration, Post Graduation /Diploma in Hospital/ Health Management, MBA.
சம்பளம்:
பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர் – ரூ.25,000/-
கணினி மேலாளர்/தரவு மேலாளர் – ரூ.20,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,(District Health Society), காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 18.11.2022 மாலை 5.00 வரை