fbpx

TNPSC..!! குரூப் 2 & 2ஏ தேர்வர்களுக்கு சூப்பர் செய்தி..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு (TNPSC GROUP II&IIA MAIN EXAMINAION) முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC..!! குரூப் 2 & 2ஏ தேர்வர்களுக்கு சூப்பர் செய்தி..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!!

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைI சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2911 – ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு:

குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி 25ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது. 16.12.2022 முடிய வரை இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோன்று, 15.12.2022-க்குள் விண்ணப்பதாரர்கள் ரூ.150-ஐ தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

Chella

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் 6,000 ரூபாய்...! இப்படி ஒரு திட்டமா...? முழு விவரம் உள்ளே...

Sat Dec 3 , 2022
கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாய் திட்டம் குறித்து பார்க்கலாம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் நேரடியாகவோ அல்லது வட்டி வடிவிலோ அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள். அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் […]

You May Like