தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிட்டப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentice, Diplomo Apprentice ஆகிய 2 பிரிவுகளில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 335 பேரும் (Civil 315, EEE 25, Architecture 15), Diplomo Apprentice பணிக்கு 145 (Civil 115, EEE 25, Architecuture 5 ) பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். Graduate Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் படிப்பையும், Diplomo Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? இது ஓராண்டுக்கான தற்காலிக பணியாகும். விண்ணப்பம் செய்ய கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் boat-srp.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.