பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட ரயிலைத் தவறவிடுவது சாதாரண விஷயம். நாம் அனைவரும், நம் வாழ்வில் ஒருமுறையாவது, தாமதமாக வந்ததாலோ அல்லது ரயிலில் அதிகமான அவசரத்தினாலோ ரயிலில் ஏறத் தவறியிருக்கிறோம். எனவே, உங்கள் டிக்கெட் வீணாகிறதா அல்லது அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் ஏற முடியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.
உங்களிடம் உள்ள டிக்கெட்டின் வகுப்பைப் பொறுத்து, அதே டிக்கெட்டுடன் அடுத்த ரயிலில் ஏற அனுமதிக்கப்படலாம் அல்லது அனுமதிக்கப்படாமல் போகலாம். ரயில்வே விதிமுறைகளின்படி, நீங்கள் ஒரு இருக்கையை முன்பதிவு செய்தவுடன், அடுத்த ரயிலில் ஏறுவதற்கு அதே டிக்கெட்டைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லை. முன்பதிவு இல்லாமல் பொது டிக்கெட் வைத்திருந்தால், அதே டிக்கெட்டில் அதே நாளில் மற்றொரு ரயில் மூலம் பயணம் செய்யலாம்.
வேறொரு ரயிலுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் நீங்கள் பிடிபட்டால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது போல் கருதப்படுவீர்கள். அபராதம் விதிக்கப்படும் மற்றும் ரயில்வே சட்ட நடவடிக்கை எடுக்கலாம். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் உங்கள் ரயிலைத் தவறவிட்டால், அடுத்த ரயிலுக்கு மீண்டும் இருக்கையை முன்பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதேபோல டிக்கெட் வாங்கும் ஸ்டேஷனில் ஸ்டேஷனில் பெயர், நேரம் எழுதப்பட்டிருக்கும். இதிலிருந்து நீங்கள் எந்த ரயிலுக்கு டிக்கெட் எடுத்தீர்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும். எனவே வேறொரு ரயிலில் பயணம் செய்தால் அதனை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்