கார் ஏசியில் கவனிக்க வேண்டியவை..!! அதுவும் கோடை காலத்தில் கட்டாயம் இதை மறந்துறாதீங்க..!!

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தில் சிக்காமல் இருப்பதற்கு நாம் நாடுவது ஏசியைத் தான். அதிலும், காரில் பயணம் செய்யும் போது ஏசி இல்லை என்றால், நம் பாடு திண்டாட்டம் தான். கோடை வெயில் உக்ரம் அடைவதற்குள் உங்கள் காரில் உள்ள ஏசியின் செயல்பாடு எப்படியிருக்கிறது? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நாம் காட்டும் சின்ன சின்ன அலட்சியங்கள் பெரிய அளவில் செலவு வைத்து விடும். வரும் கோடை காலத்தில் நமது கார் ஏசியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.


பொதுவாகவே குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓட்டத்திற்குப் பிறகு நமது கார் ஏசியை மெக்கானிக் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏசியில் உள்ள முக்கியமான ஒன்று ஏர் ஃபில்டர். அதில், அழுக்கு படியாமல் பாதுகாப்பது மிக முக்கியம். அழுக்கு படிந்த ஏசி ஏர் ஃபில்டர், காரின் கேபினுக்கு உள்ளே மோசமான காற்றைதான் வழங்கும். எனவே நீங்கள் மோசமான காற்றை சுவாசிக்க நேரிடும் என்பதுடன், இது காரின் மைலேஜையும் வெகுவாக குறைத்து விடும். இதனால், அவ்வப்போது ஏசி ஏர் ஃபில்டரை சுத்தம் செய்து விடுங்கள். எஞ்சினை ஸ்டார்ட் செய்த பிறகு மட்டுமே ஏசி-யை ‘ஆன்’ செய்ய வேண்டும்.  அதேபோல் ஏசி-யை ‘ஆஃப்’ செய்த பிறகு எஞ்சினை ‘ஆஃப்’ செய்ய வேண்டும்.

கார் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தால், உடனடியாக ஏசி-யை ‘ஆன்’ செய்யக்கூடாது. அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, உள்ளே இருக்கும் சூடான காற்றை முதலில் வெளியேற்றிய பிறகு தான் ஏசி-யை ‘ஆன்’ செய்ய வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஏசி-யை மிகவும் அதிக குளிர்ச்சியான நிலைக்கு கொண்டு போக வேண்டாம். படிப்படியாக குளிர்ச்சியான நிலைக்கு கொண்டு வாருங்கள். எடுத்த உடனே ஏசி-யை மிகவும் அதிக குளிர்ச்சியான நிலையில் வைத்தால், அது கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏசி சிஸ்டத்திற்கு நீங்கள் கொடுக்கும் இந்த அதிகப்படியான அழுத்தம், அதன் ஆயுட்காலத்தை மட்டுமல்லாது, காரின் ஒட்டுமொத்த மைலேஜையும் குறைத்து விடும். இது போன்ற சின்ன சின்ன டிப்ஸ்களை நாம் வழக்கமாக கையாண்டாலே நமது கார் ஏசியின் செயல்திறன் அதிகரிப்பதோடு, அதன் ஆயுட்காலமும் கூடும்.

CHELLA

Next Post

இனி இருசக்கர வாகன மரணங்கள் குறையும்..!! வந்தாச்சு டூவீலர் ஏர் பேக்..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Thu Mar 30 , 2023
இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். கடந்த 2019இல் 1.67 லட்சம் சாலை விபத்துகளும், 2020இல் 1.56 லட்சம் சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2019இல் 56,136 பேரும், 2020இல் 56,873 பேரும் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்டு தோறும் விபத்துக்களும், விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. விபத்து நடக்கும் போது டூவீலர்களில் செல்பவர்கள் தூக்கி வீசப்படவோ, அல்லது கனமான கல் அல்லது […]
WhatsApp Image 2023 03 30 at 9.17.56 AM

You May Like