சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது விசாரணை முடிவற்ற நிலையில், இந்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
ஆகவே இந்த வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு நடுவே செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் 3வது நீதிபதியை நியமனம் செய்து மிக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அந்த அறிவுறுத்தில் அடிப்படையில், செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சிவி கார்த்திகேயனை நியமனம் செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தில் 6வது தலைமுறையாக நீதித்துறையில் பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் நீதித்துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 1964ஆம் ஆண்டு சிம்மராஜா, சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர் சென்னை தாம்பரத்தில் இருக்கின்ற கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பையும், அம்பேத்கர் கல்லூரியில் முகங்களை சட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார் 1989 ஆம் வருடம் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கின்ற இவர், அதன் பின்னர் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு, இராமநாதபுரத்தில் பயிற்சி நீதிபதியாக 2005 ஆம் ஆண்டு பணியில் இணைந்தார்.
தமிழ்நாடு மாநில நிதித்துறை அகாடமி இயக்குனர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கின்ற கார்த்திகேயன் கடைசியாக புதுச்சேரி தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.