திரைப்பட நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அமிதாப் பச்சன் முதல் ஆலியா பட், தீபிகா படுகோன் வரை, பெரும்பாலான பிரபலங்களின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. அந்த வரிசையில் பாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவர் சமீபத்தில் தனது பள்ளி பருவ புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார்.
அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிறது. அவர் தனது தந்தையின் தொழில் காரணமாக 13 வெவ்வேறு பள்ளிகளில் தனது படிப்பை முடித்ததை நினைவு கூர்ந்தார். அந்த புகைப்படத்தில் அந்த நடிகை தனது பள்ளி நண்பர்களுடன் போஸ் கொடுக்கிறார், மேலும் அவர்களை அடையாளம் காணுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல, பிரபல நடிகை செலினா ஜெட்லி தான். மேலும் தனது பள்ளி பருவ நினைவுகளை அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். செலினாவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு காலாட்படை அதிகாரியாக இருந்தார், இதன் காரணமாக அவர் 13 வெவ்வேறு பள்ளிகளில் படித்தார். அவருக்குப் பிடித்த பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா மற்றும் ராணுவ பொதுப் பள்ளி, பின்னர் குமாவோன் மலைகளில் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
சில நேரங்களில் பள்ளி இருந்தது, ஆனால் ஆசிரியர்கள் இல்லை, சில சமயங்களில் ஆசிரியர்கள் இருந்தனர், ஆனால் வகுப்புகள் சேதமடைந்திருக்கும் என்று செலினா கூறினார். இந்த எளிய வாழ்க்கை தனது வாழ்க்கையில் மிக முக்கியமான அத்தியாயம் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“நாங்கள் சீருடையாக சல்வார் கமீஸ் அணிந்தோம். மரத்தடியில் கூட அமர்ந்து படித்தோம். பள்ளியில் வகுப்பறையில் தூங்கிய சிறுத்தைகளைப் பற்றிப் பேசினோம். எங்கள் டிபன்களை பகிர்ந்து கொண்டோம். வீட்டுக்குச் செல்லும் வழியில் ஜாமூன்கள், ஆப்பிள்கள் சாப்பிட்டோம். எளிய வாழ்க்கை… ஆனாலும், எங்கள் கண்களில் எப்போதும் பெரிய கனவுகள் தான்!” என பதிவிட்டிருந்தார்.