“பாஸ்போர்ட் பெற இனி இந்த சான்றிதழ் தேவையில்லை”..!! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

Flight 2025

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழலை இணைப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழ் அவசியம் என முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, திருமணச் சான்றிதழுக்கு பதிலாக ‘இணைப்பு J” என்ற எளிமையான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரின் பெயர், இருப்பிடம், வாழ்க்கை துணையின் பெயர் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், உங்கள் வாழ்க்கை துணையிடம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் இங்கு ஒட்ட வேண்டும். அதாவது, கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படத்தை ஒட்ட வேண்டும். பிறகு விண்ணப்பதாரரின் கையெழுத்து, அல்லது கணவன் – மனைவியின் கையெழுத்து போட வேண்டும்.

மேலும், அதன்கீழ் பெயர், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், பாஸ்போர்ட் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட வேண்டும். பாஸ்போர்ட் பெற அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் ’பாஸ்போர்ட் கேந்திரா சேவா’ அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

* ஆதார் அட்டை

* பான் கார்டு, 10, 12, டிகிரி மார்க் ஷீட்

* பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ

* வயது வாரியாக பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

* விண்ணப்பிக்கும் நபர்களின் பக்கத்து வீடுகளில் வசிப்போர்களின் பெயர், முகவரி, மொபைல் எண்

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி..?

* முதலில் https://www.passportindia.gov.in/psp என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* இதில், Username, Password உடன் தனி கணக்கை தொடங்க வேண்டும்.

* பாஸ்போர்ட்டிற்கான அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டும்.

* தேவையான சான்றிதழ்களையும் விண்ணப்பதாரரின் கையெழுத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர், மாவட்ட தலைமை பாஸ்போர்ட் அலுவலக பெயரை குறிப்பிட வேண்டும்.

* பின்னர், நேர்காணலுக்கான தேதி, நேரத்தை பதிவிட வேண்டும்.

* நேர்காணலுக்கு சென்றால், புகைப்படம் எடுத்துக் கொண்டு கையொப்பம் பெறுவர்.

* பிறகு, காவல்துறையில் இருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரணை நடத்துவார்கள்.

* வழக்குகள் ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

* போலீசார் பாஸ்போர்ட் வழங்கலாம் என உறுதிப்படுத்தி கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள்.

* பிறகு தபால் மூலம் வீட்டிற்கே பாஸ்போர்ட் வந்துவிடும்.

Read More : ராஜ்யசபா தேர்தல்..!! ஓபிஎஸை கழட்டிவிடும் இபிஎஸ்..!! பாஜக, பாமகவின் ஆதரவை பெறும் அதிமுக..!! இன்று MLA-க்கள் கூட்டம்..!!

CHELLA

Next Post

இனி ஒரே செயலிதான்!. ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு புதுப்பிப்பு!. புதிய 'ECINET'செயலி அறிமுகம்!.

Wed Jun 4 , 2025
வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் புதுப்பிப்பு செய்யப்படும் வகையில் புதிய ‘ECINET’செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இத்தகவல்கள் வழங்க இந்த அமைப்பு உதவுவதோடு, இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது அமலுக்கு வர உள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்ட கைமுறை அறிக்கையிடல் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய செயல்முறை நேர தாமதத்தை […]
polling update new app 11zon

You May Like