’இதெல்லாம் தேவையில்லாத வழக்கு’..!! தமிழக அரசுக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்..!!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம் ஆத் ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

’இதெல்லாம் தேவையில்லாத வழக்கு’..!! தமிழக அரசுக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்..!!

அப்போது நீதிபதிகள், ”இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து, அது நிறைவடைந்து விட்ட போதிலும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது. இதை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல” எனக் கூறி 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் மனுவை தள்ளபடி செய்தும் உத்தரவிட்டனர். 4 வாரத்தில் அபராத தொகையை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

CHELLA

Next Post

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்.. எந்த நாட்டில் தெரியுமா..?

Wed Sep 28 , 2022
கியூயாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். 1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், […]
63231646 303

You May Like