தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் மட்டும் தான் மகப்பேறு விடுமுறையை பெறுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் தற்காலிக பெண் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழக அரசு 6 மாத மகப்பேறு விடுமுறை வழங்க உறுதி அளித்திருப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்திய மகப்பேறு சலுகை சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு 26 வாரங்கள் அதாவது, 6 மாத காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை நிச்சயமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமானாலும் அவருக்கும் சுமார் 12 வாரங்கள் அதாவது 3 மாத கால சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டுமாம் இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் தான் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக தமிழக தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.
ஆகவே தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை ஊதியத்துடன் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அரசு நிறுவனங்களில் மகப்பேறு விடுமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டாலும் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரையில் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்வதற்காகத்தான் தற்போது மனித உரிமைகள் ஆணையம் இப்படி ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்திருப்பதாகவும், அதற்கு தமிழக அரசும் இசைவு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் அனைத்து தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் கர்ப்பமாக இருந்தால் ஊதியத்துடன் கூடிய 6 மாத கால விடுமுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பது இதன் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.