இது என்னடா கொடுமை!… வேலை தேடும் நிறுவனத்திலேயே 2200 ஊழியர்கள் பணிநீக்கம்!… அதிர்ச்சி அளித்த Indeed நிறுவனம்!

வேலைவாய்ப்பு இணையதளமான Indeed என்ற இணையதளத்தில் பணிபுரியும் 2200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகளாவிய வேலை வாய்ப்பு இணையதளங்களில் ஒன்றான Indeed இணையதளம் விளங்கிவருகிறது.வேலை இல்லாத இளைஞர்கள் பலர் Indeed இணையதளம் சென்று தான் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் என்றும் அந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடைய நிறுவனமாக Indeed இருந்துவருகிறது. இந்தநிலையில், இங்கு பணிபுரியும் 2200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மிகுந்த கனத்த இதயத்துடன் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றும் இதனால் நான் மனம் உடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு வேலை கிடைக்க உதவுவதை நோக்கமாக கொண்ட எங்கள் நிறுவனத்திலேயே வேலை நீக்க நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் கடினமானது என்றும் நிதி மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 16 வார அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்றும் மேலும் சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட Indeed சிஇஓ ‘கொரோனா காலத்திற்கு பிறகு நிறுவனம் ஏற்றத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் மிகப் பெரிய அளவில் வருமானம் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மொத்த வேலை வாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு 3.5 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்றும் கொரோனா தொற்றுக்கு பிறகு எங்கள் நிறுவனம் லாபத்தை நோக்கி செல்வதில் திணறிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

KOKILA

Next Post

இளைஞர்களுக்கு குட்நியூஸ்!... AI தொழில்நுட்பத்தில் 45,000 வேலைவாய்ப்புகள்!... TeamLease Digital அறிவிப்பு!

Sat Mar 25 , 2023
AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தநிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மயமாக்கப்பட்ட உலகில் தற்போது அதன் பயனும் அதிகரித்துவரும் வேளையில் அதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன்படி இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் (ML) பொறியாளர்கள் […]

You May Like