தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்பது மிகவும் கடினம். சாப்பாடு ஊட்டும் போது செல்போன் காட்டுவதற்கு பதிலாக, அவர்களை வெளியே அழைத்துச் சென்று இயற்கையை ரசிக்க வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் செல்போன் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.
நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்குள் மட்டுமே ஸ்கிரீன் டைம் இருக்க வேண்டும். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை அனுமதிக்கலாம். குழந்தைகளின் திரை நேரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும். இன்றைய அவசர உலகத்தில், பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இது ஒரு முக்கியமான முதலீடு என்பதை மறந்துவிடக் கூடாது.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
தடுப்பது எப்படி? கல்வி நிமித்தமாக குழந்தைகள் டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டி இருந்தாலும், அவர்களுடைய வயதுக்கு என்ன படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானிக்கலாம். வீட்டில் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டிற்கு வாய்ப்பு இல்லாத இடங்களை தேர்வு செய்து, குழந்தைகள் அங்கு அதிக நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் எவ்வளவு நேரம் டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்க்கிறார்களோ, அதற்கு ஈடான நேரத்திற்கு அவர்களை விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்யலாம்.
குழந்தைகள் டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்க்கும் போது, பெற்றோரும் சேர்ந்து அந்த வீடியோக்களை பார்க்க வேண்டும். வீடியோவின் இடையிடையே குழந்தைகளிடம் அது தொடர்பாக பேச்சு கொடுக்க வேண்டும். அப்போது குழந்தைகளின் கண்கள் வேறு பக்கம் திரும்புவதுடன், வீடியோ சார்ந்து ஆக்கபூர்வமான விஷயங்களை அவர்கள் சிந்திக்க தொடங்குவார்கள்.
Readmore: இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!