மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னதாக தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப ஜூன் மாதம் முதல் வாரத்தில் 9 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் முகாம்கள் செயல்பட்டன.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கான முகாம்கள் நடக்கவில்லை என்றால், பலரும் விண்ணப்பம் கிடைக்காமல் தவித்தனர். இதனால் இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு எப்போது முதல் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஜூன் மாதத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு விரைவில் மகளிர் உரிமைத்தொகை விரைவில் கிடைக்கும். என்றார்.மகளிர் சுய உதவி குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், விரைவில் மகளிர் சுய குழுவிற்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Read more: பாமக பொதுச்செயலாளரை காணவில்லை.. கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு..!! – ராமதாஸ்