அச்சுறுத்தும் இயற்கை பேரிடர்கள்!. மீள்வது எப்படி?. இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

World Environment Day 11zon

நாம் வாழும் பூமி, நமக்கான ஒரே ஒரு பூமி அதன் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் நாம் அதை சுரண்டி பிழைப்பதற்காக வேகமாக ஓடி கொண்டிருக்கிறோம். மேல் சொன்ன காற்று, சூரிய ஒளி எல்லாம் நீங்கள் அதை கவனித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்பதற்கான கேள்வி மட்டுமே. இப்போது நீங்கள் இவற்றை கவனித்தால் இது எதிலும் தூய்மையை காண முடியாது. சுற்றமான காற்றும், தூசு படராத ஒளியும் அழிந்து நாளாகி விட்டது. இப்போதாவது விழித்து கொள்ளுங்கள் என்பதற்காகவே ஆண்டுதோறும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.


1972ம் ஆண்டு நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மாநாட்டை தொடர்ந்து 1973ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக ஐநா சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளை இலக்காக கொண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் என்பது டிஜிட்டல் கருவிகளை நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. குறிப்பாக ஆண்டு ஒன்றுக்கு 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உலக அளவில் தயாரிக்க படுகிறதாம். இதில் அரை பங்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் 10% கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதன் விளைவாக ஆறு, ஏரி , குளம், சதுப்பு நிலங்கள் என வகைதொகை இல்லாமல் எங்கும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துள்ளன.

சுற்றுச்சூழல் என்பது வெறும் பிளாஸ்டிக் பிரச்சனை மட்டுமல்ல நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் சார்ந்ததும் ஆகும். ஏற்கனவே, போதுமான அளவு நாம் வாழும் இந்த பூமியை சுரண்டி சூறையாடி விட்டோம். இதில் பெரும் பங்கு கார்ப்ரேட் லாப வெறியே காரணம். அதற்கு பலியானவர்கள் சாமானிய மக்கள். காடுகளை அழித்தல், பெரும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் உற்பத்தி என இன்னும் பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தண்ணீரை பணம் கொடுத்து வாங்கியது போலவே, சுத்தமான காற்றையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகி விட்டது. இதை உடனடியாக தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் வாழும் இந்த ஒரே ஒரு பூமியை அதன் வளங்களோடு அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. நாம் பூமியின் வாடகைவாசி மட்டுமே. அதன் கட்டமைப்பை சிதைக்கும் உரிமை நமக்கில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் போடும் ஆட்டத்திற்கெல்லாம் வருங்கால நம் சந்ததியினர் தான் வருத்தமும், கஷ்டமும் பட போகிறார்கள் என்று மறந்து விட வேண்டாம்.

Readmore: இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!. இன்று லெஜண்ட் S.P.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்!

KOKILA

Next Post

Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! மீனவர்களுக்கு வந்த அலர்ட்...!

Thu Jun 5 , 2025
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், […]
rain 1

You May Like