ஒரே நேரத்தில் 3 சிறுமிகள்..!! இடியாப்ப வியாபாரியின் வெறிச்செயல்..!! ஆடிப்போன கரூர்..!!

Child Rape 2025

கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43). இவர் வீட்டில் இருந்தபடியே இடியாப்பம் தயாரித்து, கரூர் நகரப் பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த முன்தினம் பள்ளி விடுமுறை தினம் என்பதால், பக்கீர் முகமது அதே பகுதியைச் சேர்ந்த 12, 10, மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுமிகளைத் தனது வீட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்துள்ளார். அங்கு அந்த 3 சிறுமிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இந்த கொடூரச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உடனடியாகத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பக்கீர் முகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வீட்டிலிருந்து மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்..!! பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

விஜய் வாகனத்தை யாரும் பின் தொடரக்கூடாது.. ஈரோடு நிகழ்ச்சியில் இவர்களுக்கு அனுமதி இல்லை.. தவெக தலைமை அறிவிப்பு..!

Tue Dec 16 , 2025
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அந்த வகையில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. அந்த வகையில் வரும் 18-ம் தேதி […]
vijay 2

You May Like