தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன்25) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், ராணிப்பேட்டை சோளிங்கர் பகுதியில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, வேலுார் பொன்னை அணை, திருவள்ளூர் பூண்டி பகுதியில் தலா 4 செ.மீ., பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சோழவரம், புழல், திருவாலங்காடு, செங்குன்றம், வேலுார் மாவட்டம் அம்முண்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார், சென்னை டி.ஜி.பி., அலுவலகம் பகுதியில் தலா, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

26.06.2023 : மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.06.2023 மற்றும் 28.06.2023 : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28.06.2023: வடக்கு கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்.

CHELLA

Next Post

நாளை வெளியாகிறது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்…..! தயாராக இருங்கள் மாணவர்களே….!

Sun Jun 25 , 2023
பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு 1,87,693 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் மூலமாக கடந்த 2ம் தேதி முடிவுற்றது சான்றிதழை […]
students admission

You May Like