தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் குவாலிபையர் போட்டியில் சேப்பாக்கை வீழ்த்திய திருப்பூர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து எலிமினேட்டர் சுற்றில் திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு சென்றது. அதில் சேப்பாக்கை வீழ்த்திய திண்டுக்கல் அணி 2வது அணியாக பைனலுக்கு நுழைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ்வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது புவனேஷ்வர் ‘வேகத்தில்’ சாத்விக் (65ன்) வெளியேறினார்.அபாரமாக ஆடிய ரஹேஜா (77) கைகொடுத்தார். திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (1), பாபா இந்திரஜித் (9) ஏமாற்றினர். அதுல் வித்கர் (24) ஆறுதல் தந்தார். புவனேஷ்வர் (12) ‘ரன்-அவுட்’ ஆனார். திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இதன்மூலம் 118 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.