TNPL 2025!. விஜய் சங்கர் அசத்தல்!. நெல்லையை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!.

tnpl 2025 nellai chepauk 11zon

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் நேற்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கே. ஆஷிக், மோஹித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரிகரன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆஷிக் உடன் கேப்டன் பாபா அபராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


பாபா அபராஜித் 29 பந்தில் 41 ரன்களும், கே. ஆஷிக் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என். ஜெகதீசன் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கடைசி ஓவரை வெள்ளியப்பன் யூதீஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் விளாசிய ஸ்வப்னில் சிங் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 45 ரன்கள் விளாசினார். ஆவது பந்தில் அபிஷேன் தன்வர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் அவுட் உடன் ஒரு ரன் கிடைத்தது. மொத்தமாக 16 ரன்கள் கிடைத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது. விஜய் சங்கர் 24 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேப்பாக் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் அருண் கார்த்திக் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முகமது அட்னான் கான் 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது நெல்லை ராயல் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது. இன்றைய 10 லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் -திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

Readmore: சுப்ரீம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.47,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

KOKILA

Next Post

நான்கு திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைந்த அற்புத தலம்.. எங்க இருக்கு தெரியுமா..?

Tue Jun 10 , 2025
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]
kanchi temple 1

You May Like