தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று இந்த பயிற்சி தொடங்கி இருக்கிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரையில் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தலைமை திறன், பணியின் திறன் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் தலைமை ஆசிரியர்கள் நிச்சயமாக பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.