கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு உப்பு இல்லாமல் குடிக்க வேண்டும் என்று ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ப நம் பாரம்பரிய உணவுகளுக்கு பதிலாக, மேற்கத்திய உணவு விருப்பங்களை நம் உணவு பழக்கத்தில் நுழைத்ததே, பல வாழ்க்கை முறை நோய்கள் நம்மை பாதிக்க காரணமாக இருக்கிறது. நமது சமையலறையில் பல நறுமணம் மற்றும் சுவை மிகுந்த மசாலா பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை கலந்து சமைக்கப்படும் உணவுகள் விருந்தாக இல்லாமல், நம்மை ஆரோக்கியமாகவும் , உடலை உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், இக்கால வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால் கெட்ட கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே இந்த இரண்டும் நோய்களையும் கட்டுக்குள் வைத்திருக்க தக்காளி சாறு சிறந்த மருந்தாக உதவுகிறது.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி சாறு பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது என தெரியவந்துள்ளது. நாளிதழின் அறிக்கையின்படி, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க, தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு உப்பு இல்லாமல் குடிக்க வேண்டும். ஆய்வின்படி, தக்காளி சாறு குடிப்பவர்களின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 141.2 முதல் 137 mmHg ஆகவும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 83.3 முதல் 80.9 mmHg ஆகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அதிக கொலஸ்ட்ரால் உள்ள 125 பங்கேற்பாளர்களில், LDL கொழுப்பின் அளவு அதாவது கெட்ட கொழுப்பின் அளவு சராசரியாக 155.0 இலிருந்து 149.9 mg/dL ஆக குறைந்தது.
மேலும் தக்காளியில் கரோட்டினாய்டுகள், வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் காமா-அமினோபியூட்ரிக் அமிலம் போன்ற பல்வேறு உயிர்வேதியியல் சேர்மங்கள் உள்ளன, அவை இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.தினமும் 84 முதல் 200 மில்லி ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும். அதில் உப்பு இருக்கக்கூடாது. கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் உடலில் ஆற்றலைப் பராமரிக்க தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது யூரிக் அமிலத்தையும் குறைக்கவும் உதவுகிறது.