11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமாவிற்கு; ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் அபராதம்…!

அசாமில் 11 வயது சிறுமியை அவரது மாமா முறை உறவினரே பாலியல் வன்புனர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அதுல் பிஸ்வாஸ் (31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பிஸ்வாஸ் மாம முறை. இந்த சம்பவம் தொடர்பாக தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னார்.

உறவினரான அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு என்னுடைய குழந்தை அழுத போது, அவருக்கு 100 ரூபாய் பணமும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து அனுப்பி உள்ளார் என கூறினார்.

காவல்துறையினர் அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

1newsnationuser5

Next Post

அக்.14 - 20 வரை.. ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Fri Sep 23 , 2022
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 அக். 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி […]
TNTET1

You May Like