இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! உங்கள் மாவட்டமும் இருக்க?

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மழை விட்ட பாடில்லை, மேலும் வடக்கு கேரளா அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் நேற்றைய தினமே அனைத்து பள்ளிகளுக்கும் மதியமே விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ் கிடையாது...! ஆட்சியர் அதிரடி விளக்கம்...! இந்த மாவட்டத்தில் மட்டும்...

Tue Dec 13 , 2022
கனமழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தி நேற்று மாலை இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்ற செய்தி பரவி வந்தது முற்றிலும் […]
jpg 2

You May Like