இன்று வெள்ளிக்கிழமை..!! இந்த மந்திரத்தை சொன்னால் மகாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்..!!

Mahalakshmi 2025

இன்று (மே 30) வெள்ளிக்கிழமை. மகாலட்சுமி, துர்க்கை அம்மன் போன்ற பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு இன்று சிறப்பு வாய்ந்த நாளாகும். வாரத்தில் மற்ற நாட்களை விட, வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. மேலும், இன்று விரதம் கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் பெறலாம்.


வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்க வேண்டியவை :

* வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, குளித்தப் பின் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும்.

* பிறகு லட்சுமி தேவியின் படத்தை அலங்கரித்து தீபம் ஏற்றியும், தீபாராதனைக் காட்டியும் வழிபட வேண்டும்.

* இன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

* வெள்ளிக்கிழமை மாலை வரை விரதம் இருக்க வேண்டும்.

* பூஜையின்போது, மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடி தியானிக்கலாம்.

* லட்சுமி தேவிக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற நைவேத்தியங்களை செய்து வழிபடலாம்.

* மாலை நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபடலாம். இதனால், மகத்தான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். மேலும், ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்யலாம்.

மகாலட்சுமியின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்..?

* வெள்ளிக்கிழமை நாட்களில் குபேர விளக்கில் தாமரை திரி போட்டு அதில் விளக்கேற்றி வர வேண்டும். இப்படி செய்வதால், உங்களுக்கு குபேரரின் அருள் கிடைக்கும்.

* தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம். இப்படி செய்வதால், வீட்டில் செல்வம் பெருகும்.

* மேலும், சுக்கிர ஓரையில் பூஜை அறையில் அமர்ந்து நமக்கு என்ன தேவையோ அதை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வர வேண்டும். மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

* வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியின் அம்சம் நிறைந்த உப்பை வாங்கி வீட்டில் வைத்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதேபோல், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

* வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிர ஓரையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும்.

”ஓம் ஸ்ரீம் க்ரீம் மகாலட்சுமி வசி வசி ஸ்வாஹா”..!! வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றும் போது, இந்த மந்திரத்தை சொன்னால், மகாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.

Read More : மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

வாஸ்துபடி கார் டேஷ்போர்டில் எந்த கடவுளின் சிலையை வைக்க வேண்டும் ..?

Fri May 30 , 2025
வாழ்க்கையில் பலருக்குப் புதிய கார் வாங்குவது ஒரு பெரிய கனவாகும். அந்த காரை வாங்கிய பிறகு, புதிய காரின் டேஷ்போர்டில் தங்கள் இஷ்ட கடவுளின் படத்தை வைத்திருப்பார்கள். காரில் சரியான இடத்தில் கடவுள் சிலையை வைப்பது நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தடைகளைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து வழிமுறைகள்: சிலை சிறியதாகவும் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். சிலை வாகனம் […]
car dashborad 2

You May Like