கடந்த மாதம், சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த, ஜூலை-நவம்பரில் தக்காளி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தக்காளி விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தக்காளியின் சராசரி சில்லறை விலை ஜூன் மாதத்தில் 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை அடிப்படையிலும், அதே காலகட்டத்தில் தக்காளி விலை 45.3 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று பாங்க் ஆப் பரோடாவின் பொருளாதார நிபுணர் தீபன்விதா மஜூம்தார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மொத்த தக்காளி உற்பத்தியில் 51.5 விழுக்காடு பங்களிப்பதாக மாநில வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி 23.9 சதவீதமும், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் உற்பத்தி குறைந்தது 20 சதவீதமும் குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.