பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எனக்கு கோவிட் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2020 ஜூலையில் அமிதாப், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.