ஹீத்ரூ விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்டன. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹீத்ரு விமான நிலையம். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த விமான நிலையத்தில் 3 வது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் நேற்று பயணிகளை இறக்கி விட்டது.
அப்போது அதே ரன்வேயின் 121 பயணிகளை ஏற்றி தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை பகுதி அட்லாண்டிக் போயிங் ரக விமானத்தை பக்கவாட்டில் உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.